19 February 2011

ஞானக்கூத்தனும் கேனக்கூத்தர்களும்

உனக்கென்ன தோன்றுது?

கருத்துக்கு மாறாகப் போலீசார்கள்
கட்டி வைத்துக் கையெழுத்து வாங்கலாமா?

எனக்கென்ன தோன்றுது?

வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு.

- ஞானக்கூத்தன்

இந்தக் கதை உயர்ந்ததாமே. ஜெயமோகன் சொல்றாரே!

உனக்கென்ன தோன்றுது?

இஷ்டதெய்வம் உயர்ந்ததென்று சொன்னப்பின்னால்
இல்லையென்றா சொல்லிவிட முடியும் என்னால்

எனக்கென்ன தோன்றுது?

ஜாலிக்காய் இலக்கியத்தைப் பேச வந்தேன்
எனக்கென்று சுயமூளை இருக்கா
என்ன?