21 June 2011

புதிர்

சப்புவதும் நக்குவதும்
கலவியில் சகஜம்.

கலவியில் பிதற்றி
முயங்கிக் களித்ததில்
விளைந்த உப்பும் இனித்தது.

உடலின் புதிர் விலகியதும்
மறைவிடத்து மயிர்கூட
புதராகத் தோன்றத் தொடங்கி
ஒப்பனை இளிப்புகள் உருவாயின.

உள்ளம் கசங்க ஊற்றாய்
பீறிட்டது பாழ்.

முறிந்த உறவிலிருந்து
முளைத்தது புதிய முகவரி.
முகவரிகளைப் பரிமாறிக்கொண்டன
பறக்கும் முத்தங்கள்.

உதடுகள் தெறிக்கிற எச்சிலில்
குற்றங்கள் விஸ்தீரணப்பட்டு
கொலைகளாய் உலவத் தொடங்கின,
சப்பச்சொன்னதும்
நக்கச்சொன்னதும்