30 June 2011

எவன்

மூடிய திரையின் முன்பாக
பிம்ப நிர்பந்தத்தில்
குவிந்து நின்றன கரங்கள்.
நிழலாடி நெளிந்தது
சிகையவிழ்ந்தகோலம்.
தாண்டவமென்று
கன்னத்தில் தப்பிட்டுக்கொண்ட
பக்தி,
பரவசத்தில்
சுலோக சீழ்க்கை அடித்தது.
தரிசனத்திற்கு தாமதமாகிறதென்ற பதற்றத்தில்
பரபரவென சிடுக்கவிழ்த்து
லிங்கமாய்
உருமாறிக் கொண்டிருந்தான் சிவன்.