15 January 2012

பிரார்த்தனை

கடுப்படிக்கிறது இந்தக் கண்ணாடி
இறைவா
என்னைச் சுற்றிக் கண்ணாடியே இல்லாமல்
பார்த்துக்கொள்

அசரீரி சொல்லிற்று:

கண்ணாடிக்குப் பின்னாடி இருக்கும்
ரசத்தைச் சுரண்டி அகற்றிவிடு

கண்ணுக்கும் பிரச்சனையில்லை
கண்ணாடிக்கும் பிரச்சனையில்லை.