20 August 2011

காது

நேருமைதானக் கால்பந்துப் போட்டியில் பங்குபெற்றுத் திரும்பும் எம்.எம்.நகர் ஜேஆர்கே பள்ளி குட்டீஸ் இறங்கியதும், இனி காதுகுடையும் கூச்சல் இல்லை என்று நிம்மதி கொள்ளாமல், எதிர்வரும் நெடுந்தூரத் தனிமை எண்ணி என் போலவே முக்கலும் முனகலுமாய் கிறீச்சிட்டுப் போகிறது முதல்வகுப்புப் பெட்டி.

பி.கு: அவரவர் விருப்பப்படி எண்டர் தட்டி, தட்டாமல் வாசித்துக் கொள்ளலாம். எழுத்தாள - வாசகப் பங்கேற்பு.