09 August 2011

அதிர்வு

அறைக்குள் கிடைக்கும் பாதுகாப்பில்
இணைய வெளியில் ஏனிந்த ஆர்பாட்டம்.

நமக்கும் முன்
அநேகக் குரல்களைக்
கண்டு அதிர்ந்திருக்கின்றன மலைகள்.

மரப்பாச்சி உறிஞ்சலுக்கே மலைக்கிறாய்
போதையில் உளறல்
தவறில்லை நண்ப!
”எனக்கெல்லாம் நானெல்லாம்”
என்ன சாதித்தாய் என்று இந்த குலைப்பு?

மலை பார்த்து சமவெளியில்
அடங்கிய தொனியில் பேசு
அதிர்ந்து எதிரொலிக்கும் உன் குரல்.