18 July 2011

மண்ணாங்கட்டி

இப்போது படுத்தால்தான்
எழுத்திருக்கலாம் காலை
அல்லது நாளை.

காலையும் நாளையும்
வேறு வேறாக இல்லாமற் போனது எப்படி?

மண்ணாங்கட்டி.

மண்ணா கட்டியா
என்பதில்தான் இருக்கிறது
மயிர்பிளக்கும் தர்க்கம்.