21 July 2011

துருத்தலும் இருத்தலும் - இரண்டு கவிதைகள்

புள்ளிக் கோலம் என்பதற்காக
புள்ளி புள்ளியாய்த் தெரிவது கோலமாகுமா?

கணுவிலா இருக்கிறது கரும்பின் இனிப்பு ?

இருப்பைத் துருத்தாத வார்த்தைகள் கவிதை
வார்த்தையும் மறைந்தால் கவித்துவம்

*****

ரயில்பாதைப் புதராய்
ஓடிமறைவதையெல்லாம்
எழுத்தில் பிடிக்கத் துடிக்கிறது
முதிராத மனம்.

ஓராயிரம்முறை ஓங்கினால்
ஒருமுறை அகப்படுகிறது 
கொசு.

இருத்தலின் ரத்த சாட்சியம்.