21 July 2011

ரணமற்ற ரத்தக்கறை

முண்டியடுத்து முன்னேறிய
முட்டிகளில் ரணம்.
கரங்களில் உயிர்களின் ரத்தக்கறை.

பவ்வியப் புன்னகை தவழ,
தினமேறும் விழுப்புண் மறைத்தது
சிரேஷ்டப் பட்டுஅங்கவஸ்திரம்.

கொதிக்கும் பாறைப் பிரதக்ஷணத்தில்
கொப்பளித்து பாதம்.
ஏற்க சித்தமாயிருந்தது
ஏகாக்ரக சிந்தை.

துலாபாரம் செலுத்திய கனவானின்
எளிய விண்ணப்பம் என்னவோ
ரணமற்ற ரத்தக்கறை