22 July 2011

கொம்பு

எதையும் பிடிக்காமல்
சும்மா கையை வைத்துக் கொள்வதுதான்
எத்துனைக் கஷ்டம்

வாயைப் பார்க்க
கையின் கஷ்டம் பெரிதில்லை

சஞ்சலப்படாத நெஞ்சில் சலனமில்லை
சலனமில்லையேல் சஞ்சலமில்லை

தெய்வீகப் புன்னகையுடன் சாமியார் சொன்னார்
பற்றுக்கோடாய்
பக்கத்தில் ஒரு கொம்பைப் பிடித்தபடி