16 July 2011

ராரா! சரஸக்கு ராரா!

”ஏண்டா நரசிம்மன்னு வைத்த சோளிங்கர் குலதெய்வத்தின் சிரேஷ்டமான பெயரை மாமல்லன் பீமல்லன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறாய்? கர்மம் கர்மம்”

என்று மராத்தியில் என் அத்தை தலையிலடித்துக் கொண்ட தரத்தில்தான் வக்கிருக்கி, கிறுக்குக்கு வசைக்க. ஆனால் ஆசையிருக்கு தாஸில் பண்ண! 

புரட்சிக் கச்சேரிக்குப் பக்க வாத்தியம்தான் எனினும், இடைவெளியில் முகம்காட்ட முண்டியடிக்கும் முந்திரிக்கொல்லை மந்திரித்தொல்லை தந்திரசொல்லை எந்திரமில்லை மந்திரமில்லை யந்திரவில்லை மந்திரபில்லை என்று ஒரே வார்ப்பிலான மூடிகள்தான் எத்துனை? சுயமற்ற கும்பமேளாவின் குற்றுருவாய் ஒரு கும்பல்.

கும்பலுக்கிடையில் கோவிந்தா கோவிந்தா என வைத்தியத்தால் குணமாக்கமுடியாத பைத்தியம் ஒன்றின் தட்டுத் தடுமாறிய தனி ஆவர்த்தன வாசிப்பு அடுத்து ஆரம்பித்தாகவேண்டுமே! 

ராரா சரஸக்கு ராரா!